தலைநகர் டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) சார்பில் கல்வி அமைச்சர் பதவிக்காலம் மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு ஆதரவாகவும் சென்னையிலும் இளைஞர்கள் நள்ளிரவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நடந்து வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராகவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் திரண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
சர்வாதிகாரி போல் நடப்பது அழகல்ல.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!
நீட் தேர்வு விவகாரம், தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றுக்குக் குரல் கொடுத்து வரும் இந்த ‘காக்ரோச்’ இயக்கம், சமூக வலைதளங்கள் மூலமாகத் தொடங்கி தற்போது வீதிக்கு வந்து இளைஞர்களை ஈர்த்துள்ளது. சென்னையில் இளைஞர்களின் திடீர் திரள் மற்றும் போராட்டத்தையொட்டிப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

