Author: Prime Reporter
நடிகரான விஜய் தற்போது அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் நிலையில், விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம், புதுச்சேரி என மாறி மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், இதுவரை எந்த ஊடகத்துக்கு பேட்டி கொடுத்ததில்லை. ஏன் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான போதும் கூட விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார். அவர் எப்போது பேட்டி கொடுப்பார் என ஊடகங்கள் காத்திருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவர் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அவர் பிரபல தொலைக்காட்சியில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேட்டி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி! ஜீ தொலைக்காட்சியில் வரும் ஏப்.,14 அன்று மக்கள் நாயகன் என்ற டைட்டிலோடு…
நாம் அறியாமல் செய்யும் 8 அன்றாடத் தவறுகள் எப்படி நம்மை விரைவாக முதுமையை நோக்கித் தள்ளுகின்றன? ஆரோக்கியமான மாற்றங்கள் மூலம் இளமையைத் தக்கவைப்பதற்கான வழிகள்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்ளை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,திரு ஸ்டாலின் அவர்களுக்கு, மத்திய அரசின் நோக்கங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத விஷயங்களைக் குறித்து கூட குறை கூறுவது ஒரு பழக்கமாகி விட்டது. 2026–27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ (இரண்டாம் நிலைப் பள்ளி பாடத்திட்டம் – பகுதி 1) படி, 2026–27 கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் மூன்று மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த மூன்று மொழிகளில் இரண்டும் இந்தியாவைச் சேர்ந்த மொழிகளாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. வழங்கப்படும் மொழிகளை விளக்குவதற்காக, இந்திய அரசியலமைப்பின் 8ஆம் அட்டவணையில் பட்டியலிடப்பட்ட அனைத்து அட்டவணை மொழிகளும், அதோடு பிற இந்திய பிராந்திய மொழிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின்…
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ், அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற மறுத்ததால் மாடிக்கு ஊர்ந்து சென்ற அவலம்.
மயிலாப்பூர் வீரபத்ர சுவாமி கோயிலின் தல வரலாறு, பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் மற்றும் நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை மாலை வழிபாட்டின் சிறப்புகள் குறித்த தொகுப்பு.
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தள்ளாத குடிபோதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசும் காணொலி வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலத்தில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தள்ளாத குடிபோதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்தக் காணொலியை காண்பதற்கே மனம் வலிக்கிறது. திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தை படித்து, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டிய தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களை இப்படி ஒரு நிலைக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக வானத்தை வில்லாய் வளைத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டன் டன்னாய் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார். ஆனால், மாணவர்களின் நலனுக்காக அவர் எதையும் செய்யவில்லை. மாறாக அவர்களுக்குத் தேவையான தரமான கல்வியை வழங்காமல், தேவையற்ற மதுவைத்…
2026 தேர்தலில் ரஜினிகாந்த் பரப்புரை செய்வாரா? தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரஜினி அளித்த அதிரடி பதில் மற்றும் அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்த முழு விவரம்.
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் விழிப்புணர்வுக்காக மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து 50-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது.
தேர்தல் நேரத்தில் கூட்டப்பட்டிருக்கிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும் என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை வரும் ஏப்ரல் 16 ,17 தேதிகளில் மோடி அரசு கூட்டியிருக்கிறது. தமிழ்நாடு,மேற்கு வங்கம் ஆகிய இரண்டு முக்கியமான மாநிலங்களில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இறுதிக்கட்ட பிரச்ச்சாரம் மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் எதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இவ்வளவு அவசரமாகக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாதா? நேர் வழியில் மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெல்ல முடியாத பாஜக இதுபோல் குறுக்கு வழியில் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்று நினைப்பதும்,அதற்காக மதிப்பு மிகுந்த நாடளுமன்றத்தைப் பயன்படுத்த நினைப்பதும் அவமானகரமானது. 40 அடி தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாநகராட்சி பணியாளர்கள்.. திமுக தான் காரணம்..…
மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் சரியான உபகரணங்கள் இல்லாததால் உயிரிழந்ததாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கோவை, சாய்பாபா காலனி பகுதியில் நேற்று மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் இருவர், எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத் உள்ள தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ. 467.6 கோடி முதலீடு: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?.. எத்தனையோ நவீன வசதிகள் வந்த பின்னரும் விடியா திமுக அரசு போதிய உபகரணங்கள் மற்றும் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் கமிஷன், கலெக்ஷன், கரப்சன் என கல்லா கட்டுவதிலேயே குறியாக இருந்து அப்பாவி மக்களை பலிகடா ஆக்கிக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
