உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் பி. சிதம்பரம் உள்பட 35 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குகளை திறம்பட கையாள்வதற்காகவும், மாநிலத்தின் உரிமைகளை வலுவாக வாதிடுவதற்காகவும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்.. முட்டிக்கொண்ட திமுக – தவெக..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பி. சிதம்பரம் மற்றும் பல சட்ட வல்லுநர்கள் அடங்கலாக மொத்தம் 35 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் நிலுவையில் உள்ள முக்கிய சட்டப் போராட்டங்கள் மற்றும் காவிரி, மேகதாது போன்ற நதிநீர் பங்கீட்டு வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களை திறம்பட எதிர்கொள்ள இந்த புதிய சட்டக் குழு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

