Author: Prime Reporter
சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு நுழைந்துள்ளா நடிகர் விஜய். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிட உள்ளது. இதனிடையே ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்திருந்தார். 2026 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், தணிக்கை குழுவால் நிறுத்தப்பட்டு நீதிமன்றம் சென்றது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ரிலீசுக்காக போராடி வரும் ஜனநாயகன் திரைப்படம், மீண்டும் மறுதணிக்கைக்கு சென்றுள்ளது. படத்தில் பல காட்சிகள் தணிக்கை -குழுவால் நீக்கப்பட்டு, நீதிமன்றம் சென்று மறு தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் மீண்டும் மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த மாதமே படம் வெளியாக வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துள்ளனர்.
ஏதாவது ஒரு விழா, அல்லது திருமண நிகழ்வில் ஒரே மேடையில் பிரபலங்கள் சந்தித்துக் கொள்வது அரிதான விஷயம். அப்படி சமீபத்தில் நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் இளைய மகளுடைய திருமணம் நீலகிரியில் எளிமையாக நடந்தது. பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், நடிகர் தனுஷ் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. காரணம், ரீல் அம்மா, மகனாக நடித்தவர் சரண்யா, தனுஷ். தனது மகள் திருமணத்திற்கு வந்த தனுசை வெல்கம் செய்த சரண்யா, கண்டிப்பா சாப்பிட்டு போகணும் என மேடையில் கூறியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தனுஷை பாத்ததும் ப்ரியா அருள் மோகன் 😍🥰😍 pic.twitter.com/a4hoSXwosZ— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) February 9, 2026 இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், தனுஷ் உடைய மேலாளர் ஸ்ரேயாஸ், நடிகை பிரியங்கா மோகனை பார்த்ததும், கட்டியணைத்தார், அவருக்கு…
சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே யோசிக்காமல் நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன். பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா, நடிகர் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, கொடி போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருந்தார். சரண்யா – பொன்வண்ணன் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இளையமகள் சாந்தினிக்கு சமீபத்தில் நீலகிரியில் திருமணம் நடந்தது. பின்னர் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர்கள், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தனர். அதே போல முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். ஆனால் நடிகர் தனுஷ் பங்கேற்றது தான், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், மேடைக்கு தனுஷ் வந்தததும், ஆச்சரியமாக பார்த்த சரண்யா, கண்டிப்பாக சாப்பிட்டு போகணும் என கூற, நிச்சயமாக சாப்பிட்டு போகிறேன் என அவர் கூறினார். இருவரது உரையாடல்களும், பார்வையாளர்களுக்கு பார்த்தாலே புரிந்துவிடும் வகையில் இருந்தது. இதை பார்த்த பார்வையாளர்களும் புன்னகையுடன்…
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் அஜித். சமீப காலமாக கார் ரேஸ், பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சொந்தமாக ரேஸிங் கம்பெனி வைத்துள்ள அஜித், அதிக கவனத்தை இனி செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார், அடிக்க பந்தய காரில் சீறிப் பாயும் அஜித்தின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்தை பிரபலங்கள் பலர் சந்தித்து வருகின்றனர். நயன்தாரா, ஸ்ரீலீலா, அனிருத் என ஏராளமான நட்சத்திரங்கள் அவரை சந்தித்து வாழ்த்து கூறி வரும் நிலயைல், ரேஸ் டிராக்கிற்கு சென்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். #SivaKarthikeyan at Yas Marina Circuit Abu Dhabi 🔥 @Akracingoffl @Siva_Kartikeyan @SureshChandraa @ymcofficial @DoneChannel1 #AjithKumarRacing #AjithKumar #SivaKartikeyan pic.twitter.com/KWjaXO4gST— Done Channel (@DoneChannel1) February 7, 2026 துபாய் ரேஸ் டிராக்கில் நடிகர் அஜித்தை சந்தித்து…
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், காவியாவிற்கு அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, கணவர் காவியாவை கண்டித்துள்ளார். ஆனால் யாருக்கும் தெரியாமல், கள்ளக்காதலன் கார்த்திக்குடன் காவியா ஓடிப்போயுள்ளார். பின்னர், மீண்டும் அவரை அழைத்து வந்து சமரசம் செய்து செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர். ஆனால் கள்ளக்காதலனுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளாத காவியா, மீண்டும் கார்த்திக்குடன் பழகி வந்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள நகை, பணம் கொடுத்து உதவியும் செய்து வந்துள்ளார். இதை தெரிந்த செந்தில்குமார், காவியாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.…
இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என விஜய் பட நடிகை கதறி அழுத வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹோம்லியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த் என பலருடன் தமிழில் நடித்திருந்த பூமிகா, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் அவர், யுபோரியா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் விழா ஐதராபாத்தில் நடந்த போது, பங்கேற்க வந்த பூமிகா அழத் தொடங்கிவிட்டார். யுபோரியா பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்மந்தப்பட்ட உண்மைக் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து பேசத் தொடங்கிய பூமிகா கதறி அழுதார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன் என அழுதார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார். திமுகவை ஒரு “தீய சக்தி” என விமர்சித்த அருண்ராஜ், அந்த சக்தியை வீழ்த்துவதே தவெக-வின் முதன்மை இலக்கு என்றார். கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கட்சி மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், “திமுக சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்” என உறுதிபடத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நிலையில், சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், விழுப்புரத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். அது மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என முதல் மாநாட்டிலியே அறிவித்தது, சக அரசியல் கட்சிகளிடையே பேசுபொருளானது. திமுக, அதிமுக இதுவரை கூட்டணி போட்டு ஆட்சி நடத்தினாலும், இது ஆட்சியில் பங்கோ, அதிகாரமோ கொடுத்ததில்லை, ஆனால் விஜய் கட்சி தொடங்கிய போதே இதை அறிவித்தார். ஆனால் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி பேரம் பேசவில்லை. இது குறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் கொள்கை முதுடிவு. கூட்டணிக்கு கட்சி வருவார்கள் என…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு, தமிழகம் முழுவதுமே மோசமான சூழலில் இருக்கிறது. ரவுடித்தனம் செய்தால், நாளை திமுகவில் அமைச்சராக்குவார்கள் என்ற எண்ணத்தில், திமுக நிர்வாகிகள் அனைவருமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு,… pic.twitter.com/q6SRV3t3ju— K.Annamalai (@annamalai_k) February 6, 2026 இவர்களின் கொட்டம்…
குத்து பாடல்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் முன்னணி நடிகையாக மாறுவது வாடிக்கையாக விஷயமாக மாறிவிட்டது. அப்படி எத்தனையோ நடிகைகள், ஒரு பாட்டுக்கு ஆடி ஃபேமஸாகி, முன்னணி நடிகர்களுடன் இணைந்து சினிமாவில் கோலோச்சியுள்ளனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீ லீலாவுக்கு தனியிடம் உண்டு. கவர்ச்சியாக பாடல்களில் தோன்றினால், அது டிரெண்டிங் ஆகி பெரிய ஹிட் கொடுத்துவிடும். தற்போது டிரெண்டிங் நடிகையாக தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா. இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளார். ஐதராபாத்தில் நேற்று மால் திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த ஸ்ரீலீலாவுக்கு ரசிகர் ஒருவர் லவ் லெட்டர் கொடுத்துள்ளார். View this post on Instagram A post shared by @kissik_celeb அதை படித்த ஸ்ரீலீலா, அந்த ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
