திமுக அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் அநாகரீக நடந்துகொண்ட கோவை திமுக வார்டு செயலாளர் இப்ராஹிம் மீது அதிரடிப் புகார்கள் எழுந்துள்ளன.
கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழைப் பெண்களைச் சுரண்டும் அவலம் அரங்கேறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 79-வது வார்டு திமுக செயலாளர் இப்ராஹிம் என்பவர், கட்சி அலுவலகத்திற்கு வேலைக்கு வரும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, வறுமையில் வாடும் பெண்களைத் தனது வலைக்குள் வீழ்த்த முயல்வதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். அலுவலகமா? மினி பாரா?: மாலை 6 மணிக்கு மேல் திமுக மன்றம் மது அருந்தும் இடமாக (Mini Bar) மாற்றப்படுவதாகவும், இப்ராஹிம் போதையில் பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொருட்கள் மேலும் தேர்தலை முன்னிட்டு கட்சி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டப் பொருட்களை (அண்டாக்கள்) பொதுமக்களுக்குக் கொடுக்காமல், தனது சொந்த இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் இவரின் இத்தகைய அநாகரீகச் செயல்களைக் கண்காணித்து வந்த திமுக கட்சியினரே, புகைப்பட ஆதாரங்களை வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு கருதி வீடியோ ஆதாரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அரசியல் பதவியைக் காட்டி பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்சித் தலைமையோ அல்லது அந்தப் பகுதி ஜமாத்தார்களோ தலையிட்டு, இது போன்ற நபர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. குடும்ப மானத்திற்கு அஞ்சி வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

