Author: Prime Reporter
ஜெயம் ரவி ஆர்த்தி மற்றும் கெனிஷா தொடர்பான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடிகை தபு தனது தந்தையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் குழந்தை பருவ நினைவுகள் மற்றும் குடும்ப அனுபவங்கள் குறித்து உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்
டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில 11வது லீக் ஆட்டத்தில் யுஏஇ – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பேட்டிங் செய்தது. 20 ஓவரில் யுஏஇ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இறங்கியது. தொடக்க வீரர்களாக சைஃபர்ட் மற்றும் ஆலன் இறங்கினர். யுஏஇ பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறி அடித்தனர். யுஏஇ அணியால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறினர். முடிவில் 15.2 ஓவரில் 175 ரன்கள் என்ற இலக்கை சுலபமாக அடைந்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, சைஃபர்ட் மற்றும் ஆலன் இணைந்து 175 ரன்கள் எடுத்தது அதிக பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிரட்டும் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். 90களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றியவர். தற்போது அவரின் நிலைமை பரிதாபம்தான். வீல் சேரில்தான் அவர் உலா வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில வீல் சேரில் அமர்ந்தபடியே அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ டிரெண்டானது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் அரசியல் குறித்து பேசினார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மாற்றம் வர வேண்டும் என நினைக்காலம், அது விஜய்யாக இருந்தாலும் சரி. மேலும் மற்ற நடிகர்கள் எனக்கு உதவியது போல, விஜய் எனக்கு உதவி செய்யவில்லை. அதற்காக அவரை நான் கெட்டவன் என சொல்லவில்லை என பொன்னம்பலம் கூறினார்.
ஆட்டோவில் பயணம் செய்வது சிலருக்கு அலாதியான இன்பம் என்றே சொல்லலாம். ஒரு சில ஓட்டுநர்கள் பயணிகளை நன்கு மதிப்பர். ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்கள் வாகனங்களை அலங்கரித்து பயணிகளை கவருவர். ஆனால் தனது ஆட்டோவில் சிறுமியை உறங்க வைத்து சவாரி செய்து வருகிறார் ஓட்டுநர் ஒருவர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆட்டோவில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ பின் இருக்கையில் சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கார். உடனே ஓட்டுநர் சிறுமியை பற்றி கேட்க, ஓட்டுநர் சொன்ன வார்த்தை நெகிழ வைத்துள்ளது. ஓட்டுநர் கூறியது, அது என் மகள் ஆயுஷி, என் மனைவி இறந்துவிட்டதால், மகளை தனியாக கவனித்து வருகிறேன். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத சூழல் உள்ளதால், தினமும் சவாரிக்கு செல்லும் போது, மகளை பின் இருக்கையில் அமர்த்திவிடுவேன். View this post on Instagram A post shared by…
கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். கோவையிலேயே பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களை குடி நோயாளிகளாக மாற்றி விட்டதாகவும், தமிழ்நாடு அரசே மதுவிற்கு அடிமையாகி விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் நெருங்குவதால் பார் லைசென்ஸ்கள் வழங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி திரட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். முதல்வர் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஜெபம் செய்வதாக கூறுவதாக…
டிரெண்டிங் இசையமைப்பாளர் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இந்தியா முழுவதும் இவரது இசைக்கு ரசிகர்கள் உண்டு. 3 படத்தில் தொடங்கிய பயணம், ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான் என பான் இந்தியா இசையமைப்பாளராக உருவாகியுள்ளளார். கோடியாக கோடியாக சம்பளம் வாங்கினாலும் சந்தோஷம் இல்லை என அனிருத் பேசியுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சிறு வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும் போது ரூ.500 கொடுப்பார்கள். அதில் இருக்கும் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, சில நிகழ்ச்சிகளில் சம்பளம் தராமல், வெற்றிலை பாக்குடன் முடித்துவிடுவர். ஆனால் இப்போது கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும், சிறு வயது சந்தோஷம் இப்போது இல்லை என ஓபனாக பேசியுள்ளார்.
பல படங்களில் குத்தாட்டம் போடவே ஒரு பாடலுக்கு நடித்து வந்த நடிகை தற்போது படுத்த படுக்கையாகி உள்ளார். நடிகை முமைத்கான, என் பேரு மீனாகுமாரி பாடலில் செம ஆட்டத்தை போட்டிருப்பார். அந்த பாட்டுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் நெருப்பே பாடலுக்கு ஆடி பலரது கவனங்களை ஈர்த்த அவர், தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கமிட் ஆனார். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதை வாடிக்கையாக கொண்ட முமைத்கான், எப்பேர்ப்பட்ட நடனத்தையும் அசால்டாக ஆடி விடுவார். போக்கிரி படத்தில் என் செல்ல பேரு, வில்லு படத்தில் டாடி மம்மி என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மலையூர் மம்பட்டியான், மருதமலை போன்ற படங்களல் கௌரவ தோற்றங்களில் நடித்தார். பல வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சில வருடங்களுக்கு…
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழகம் சார்பில் பாகம் முகவர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் சதீஷ் தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேடையில் ஒவ்வொரு நிர்வாகியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பாளர் தா மாரி பேச தொடங்கினார். “எனக்கு கோபம் கோபமாக வருகிறது. நான் கட்சிக்காக மூன்று முறை சிறை சென்று உள்ளேன். அதில் பத்திரிக்கையாளர்களை அடித்து விட்டு சிறை சென்று இருக்கிறேன். நான் மறுபடியும் சொல்கிறேன் எனக்கு கோபம் வருகிறது. பத்திரிக்கையாளர்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.. வீடு புகுந்து உங்களை அடிக்க வேண்டியது வரும் கண்டிப்பாக அது நடக்கும்” எனக் கூறிவிட்டு வணக்கத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
புதுப்படங்கள் ரிலீசாவதற்கு இணையாக ரீரிலீஸ் படங்களுக்கும் மவுசு அதிகம்தான். இப்போதைய சினிமா வரலாற்றில் எல்லா படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுப்பதால், கில்லி, மங்காத்தா, படையப்பா, சச்சின் போன்ற படங்கள் மீண்டும் திரையில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களை குதூகலிக்கும் விதமாக முத்தான மூன்று படங்கள் மீண்டும் திரைக்கு வர உள்ளது. அதில் மௌனம் பேசியதே மற்றும் மின்னலே படம் ரீரிலீஸ் ஆவது தெரிந்த விஷயம் என்றாலும், 3வதாக காதலர் தினம் படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த வருட காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டும் என நம்பலாம்.
