Author: Prime Reporter
சாய் பல்லவி, தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி பின்னர் மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். பிரேமம் படத்தால் பிரபலமான சாய் பல்லவிக்கு தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. நடிப்பு, நடனம் என பின்னி பெடலெடுக்கும் சாய் பல்லவி, நிஜத்தில் ஒரு மருத்துவர். ஏகப்பட்ட திறமை வைத்திருந்த சாய் பல்லவி தற்போது இந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார். அமரன், கார்கி படங்கள் தமிழில் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில், தனுஷ் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். இதை தவிர கல்கி படத்தின் அடுத்த பாகத்தில், தீபிகா படுகோனேவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், தனுஷ் உடன் நடிக்கும் D55 படத்தில் தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளார். ஏற்கனவே தனுஷ் உடன்…
வெண்டைக்காய் நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா என்பதை மருத்துவர்கள் விளக்குகின்றனர் இந்த செய்தியில் ஆரோக்கியமான பயன்பாடு மற்றும் சாத்தியமான அபாயங்கள் பற்றியும்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் கருப்பு திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா, நடிகை ஜோதிகாவை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், உண்மையில் இவர்கள் காதலுக்கு ஊன்றுகோலாக இருந்தது ஒரு நடிகைதான் என சிவக்குமார் கூறியுள்ளார். சிவக்குமார் கூறியதாவது, சூர்யா – ஜோதிகா காதலுக்கு முக்கிய காரணமே நடிகை ராதிகாதான், உயிரிலே கலந்தது திரைப்படத்தின் படப்பிடிப்பில், ஜோதிகாவிடம் போய் பேச சொல்ல சூர்யாவை தூண்டிவிட்டார். நான் 150 நாயகிகளிடம் லவ் பண்றமாதிரி நடிச்சிருக்கேன். நான் என் மகனுடைய காதலுக்கு எப்படி தடையாக இருக்க முடியும் என வெளிப்படையாகவே சிவக்குமார் பேசினார்.
அன்றாடம் நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்வது தூய்மை பணியாளர்கள் மட்டும்தான். குப்பை என்று பாராமல், நேசத்தோடு பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பெரியதாக யாரும் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் இன்று தூய்மை பணியாளர்கள் என்றால் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது அவர்களின் பதவிக்கு… காரணம் ஒரே ஒரு பெண் தான். அவர் தான் பத்மா. சென்னையில் குப்பையை அள்ளும் போது கிடைத்த 45 சவரன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்பைடத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மனிநேயத்தை மீண்டும் நினைவுப்படுத்திய இந்த நிகழ்வு வைரலானதை தொடர்ந்து பத்மாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் தாண்ட பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். பத்மா போட்ட விதை தான்.. தற்போது மரமாக எழ துளிர்விட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பலர் குப்பைகளை அள்ளும் போது கிடந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்பைடத்து பாராட்டுகளை பெற்று…
நடிகை ஸ்ரீலீலா படத்தில் நடித்துக் கொண்டே படிப்பையும் முடித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் பிஸியான நாயகியாக வலம் வருகிறார். தற்போது தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பதில் கவனம் செலுத்தினாலும், படிப்பிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வருகிறார். அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா 24 வயதில் சாதனைகளை படைத்துள்ளார். அவர் தாயார் டாக்டர் என்பதால் இவரும் அதை படிக்க விரும்பினார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது படிப்பை தொடர்ந்துள்ளார். மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பட்டத்தை வாங்கி பட்டையை கிளப்பியுள்ளார். மேடையில் அவர் கருஞ்சிவ்பு நிற பட்டமளிப்பு அங்கி அணிந்து பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனர். 24 வயதில் ஸ்ரீலீலாவின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள், மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது
கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியை சேர்ந்தவர் பரத்ராஜ்(29). இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஆதித்யா சிங்காநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். மற்றொரு தோழி சங்கீதா பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பரத்ராஜ் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் சங்கீதாவின் இல்லத்திற்கு சென்று விட்டு பின்னர் மூன்று பேரும் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆதித்யாவின் இல்லத்திற்கு காரில் புறப்பட்டுள்ளனர். பரத்ராஜ் காரை ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது தடாகம் -கணுவாய் சாலையில் அதிவேகமாக காரை இயக்கியதாக தெரிகிறது. அந்நிலையில் காளையனூர் அருகே பரத்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பனை மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த பரத்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கீதா மற்றும் ஆதித்யாவிற்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில்…
நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விவரங்கள் பேசப்படுகிறது
பல நடிகைகள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் அக்கா, அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகின்றனர். அப்படி அம்மா ரோலில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய ரவுண்டு வந்தார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் இவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இவருக்கு திருமணமாக சுப்ரிதா என்ற மகள் உள்ளார். இதனிடையே 2019ல் சுரேகாவின் கணவர் இறந்து போனதால், தனிமையில் மன உளைச்சலுக்கு ஆளானார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க எண்ணினாலும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அதிகமாக சுரேகா வாணி ட்ரோல் செய்யப்பட்டார். இன்ஸ்டாவில் போட்ட புகைப்படங்களை பார்த்து குடும்பத்தினர் பல விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் சுரேகாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள் சுப்ரிதா முடிவு செய்துள்ளார். சுரேகா வேண்டாம் என கூறினாலும், சுப்ரிதா இந்த முடிவை திட்டவட்டமாக எடுத்துள்ளார். ஒன்றரை வருடமாக அம்மா மேக்கப் போடவில்லை, அவருக்கு சினிமாவில் வாய்ப்பு…
நடிகை தமன்னா மைசூர் சாண்டல் சோப் பிராண்டின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார் இயற்கை சந்தனம் மணம் கொண்ட தயாரிப்பு மீண்டும் கவனம் ஈர்க்கிறது
