Author: Prime Reporter
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. 13வது போட்டியான தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பலப்பரீட்சை நடந்தன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிதான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் போட்டி வைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு ஓவரில் 17 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியும் 17 ரன்களை எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. முதல் முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக மாறியது. 2வது சூப்பர் ஓவரில் தென்னாப்பரிக்க அணி முதலில் பேட் செய்து 23 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19…
சினிமா வரலாற்றில் 80 மற்றும் 90களை திரும்பிப் பார்த்தால் ஏராளமான பக்தி படங்கள் வெளியானது. இதில் அம்மன், ராஜகாளி அம்மன், பண்ணாரி அம்மன் என பட்டியல் பெரியது. ஆனால் தியேட்டரில் சாமி வந்து ரசிகர்களே ஆடியது என்றால் அது பாளையத்து அம்மன் திரைப்படம் தான். 2000ஆம் ஆண்டு ராம்கி, திவ்யா உன்னி, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஹிட் அடித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா உன்னி, மலையாள தேசத்து வரவு என்றாலும் கண்ணன் வருவான் படத்தில் கார்த்திக் உடன் ஜோடி போட்டது தான் முதல் படம். அதைத்தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரியதாக மார்க்கெட் இல்லை. 2001ல் சுதிர் சேகரன் என்பவரை மணந்து 2017ல் விவாகரத்து பெற்றார். 2018ல் அருண் குமார் என்பவரை திருமணம் செய்தார். திவ்யாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். View this post on Instagram A post shared…
நடிகை விசித்ரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
சுவையான மீன் வறுவல் வீட்டிலேயே எளிதாக செய்யலாம் மசாலா கலவையுடன் பொன்னிறமாக வறுத்தால் ருசி அதிகரித்து குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணி பலமாக உள்ளது என கூறிய நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விக்கு , இதற்கு என்ன பதில் சொல்வது, தலையெழுத்து படி நடக்கட்டும், திமுக கூட்டணி பலம் இல்லாமல் உள்ளது. தோல்வி அடைவது நிச்சயம். கூட்டணிக்கை தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. ஸ்டாலின்…
சாம்சங் கேலக்ஸி S26 தொடர் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது புதிய அம்சங்கள் மேம்பட்ட கேமரா திறன் சக்திவாய்ந்த செயலி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் அச்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது என்னையும் கைது செய்யுங்கள் என சீமான் வேனில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் சீமானையும் கைது செய்தனர், பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பச்சை பட்டாணி முகமூடி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது முகப்பரு கரும்புள்ளி குறைத்து இயற்கையான ஈரப்பதத்தை வழங்கி மென்மையான தோலை தருகிறது
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்றும், திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், மக்கள் முடிவு செய்வார்கள்.. கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.. 2006ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் செய்த தவறு என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 12% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு அதில் திமுக வெல்லும் என வெளியாகியுள்ளது. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் மெத்தனமாக இந்த கட்சி இருக்காது, தொடர்ந்து உழைத்து கொண்டே இருப்போம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் ஒத்துவராது, திமுக காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். இதில் எந்த குழப்பமும் இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். எனக்கு ராகுல் காந்தி சகோதரரை போன்றவர், அவருக்கும் அப்படித்தான். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைத்து வரும் திமுக…
