Author: Prime Reporter
கோவையில் இருந்து சேலம் புறப்பட்ட அரசு பேருந்து உத்தமசோழபுரம் என்ற இடத்தை கடந்து செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பையும் தாண்டி, எதிரே வந்த வாகனங்களில் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் எதிரே வந்த டெம்போ வாகனத்தில் செல்வராஜ், அமுதா, முருகன், நித்திஷ்கா, ஜீவிகா மற்றும் கர்ப்பிணி சத்யா என ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களும், இருசக்கர வாகனத்தில் பயணித்த மணிகண்டன், இருசாயி ஆகிய இருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகளை காவல்துறையின மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்துள்ளளனர். அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே அரியானூரில், அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத்…
சிறந்த நடிகை விருது பெற்ற ராஷ்மிகா தனது பயணத்தில் எதிர்கொண்ட கிண்டல்களை நினைத்து மேடையில் உணர்ச்சியுடன் பேசியது வைரலாகியது
திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் துவைத்து வெளியே அனுப்பும் போது , ‘’அண்ணே… பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’’ என வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும். இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்து சந்தித்திருக்கிறார் அடிமை பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் தலைமை அதிமுக என்று சொன்னால் அந்த அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில்தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், பாஜக தலைவர் அமித்ஷா வீட்டில் அல்லவா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. கூட்டணிக்குத் தலைமை…
கோவை அவிநாசி சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆதவ் அர்ஜுனா மீதான கரூர் எக்ஸ் (Karur X) விவகாரத்தில், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா டாரதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தனது மகனை குறித்து வந்த சர்ச்சை விமர்சனங்களுக்கு வேதனையுடன் பதிலளித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதி பேசும் யோக்கியர்களின் சாயம் வெளுத்துவிட்டது! அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் கக்கியுள்ள அந்த அருவருக்கத்தக்க வார்த்தை, திமுக-வின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் ‘சாதிய வன்மத்தையும், திமிர் பிடித்த பண்ணையார் புத்தியையும்’ அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது ‘உங்க அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா’ என்று ஓர் அமைச்சர் பேசுகிறார் என்றால், இவர்களுக்குச் சாமானிய மக்கள் மீது என்ன மரியாதை இருக்கிறது? இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சுயமரியாதை அரசியலா? பேரறிஞர் அண்ணா செதுக்கிய கொள்கையும், தந்தை பெரியார் வழிகாட்டிய சமூக நீதியும் இன்று இந்த ‘வசூல் ராஜாக்களின்’ கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. சாதியத்தை ஒழிப்போம் என்று கூவிக்கொண்டே, கட்சியின் தலைமை முதல் கடைக்கோடித் தொண்டன் வரை சாதியத் திமிரையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! தன்னை ‘பெரியாரின் பேரன்’ என்று…
டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில், டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். 2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்? உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, “பகீர்” என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி? அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாயன்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள்…
இயக்குநர் செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ திரைப்படத்தின் திரைக்கதை பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
