Author: Prime Reporter
திருப்பூரில் ஒரு குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் பண்டிகையன்று 150-க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு பிரியாணி வழங்கி மத நல்லிணக்கத்தை பறைசாற்றி வருகின்றனர்.
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா திருமணம் குறித்த வதந்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனின் செயல்பாடு வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ள நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கள்’ இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் திருச்சி காவல்துறையினர் சிறையில் அடைத்து வைத்திருப்பது கொடுங்கோன்மையாகும். மருத்துவக் குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்க கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தபடும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு “K001” வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப்…
விஜய் மற்றும் திரிஷா குறித்து அட்லீ இரண்டாம் பேபி ஷவரில் கலந்து கொண்டது தொடர்பாக பரவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக பேசப்படுகின்றன
தரம் தாழ்ந்த செய்திகளைத் தினந்தோறும் அள்ளி வீசும் ஒரு ‘உதவா-கரன்’ ஆக தினகரன் பத்திரிகை மாறிவிட்டது என தவெக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை மற்றும் சமூக ஆர்வலர் நிவேதா பெத்துராஜ் விஷயத்தில் தினகரன் செய்திருக்கும் காரியத்தை பார்த்தால், பத்திரிகை தர்மம் காற்றில் கரைந்துவிடும் போலிருக்கிறது. ஐடி விங் வெறுப்பையும், தவறான தகவல்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் அதிகரித்து கொண்டிருந்தால், அந்த பொறுப்பு, அக்கட்சியின் தலைவரையே சேரும் என்று கூறியிருந்தார். எழுத்தாளர் மீனா கந்தசாமி விஷயத்தில் திமுக ஐடி விங் ஆபாச தாக்குதல் நடத்தியதை ஒட்டியே இது எழுதப்பட்டுள்ளது. இந்த உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில், கற்பனைத் குதிரையைத் தறிகெட்டு ஓடவிட்டு, செய்திக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறது இந்த ‘வதந்தி-கரன்’. இவர்களின் வன்மத்தைப் பார்த்தால் ஆத்திரத்தை விட, “இப்படியா இளிச்சவாய்த்தனமாக பொய் சொல்வார்கள்?” என்கிற சிரிப்புதான் பொத்துக்கொண்டு வருகிறது. அறிவாலயத்தின் அடிமைச்…
விஜய் மனைவி தாக்கல் செய்த விவாகரத்து மனு இணையத்தில் கசிந்தது எப்படி என நீதிபதி விளக்கம் கொடுத்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைந்துள்ள விஜய் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு இணையத்தில் வெளியானது. நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் உள்ளதாகவும், தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகை யார் என கூறிவிடுவேன் என எச்சரிக்கையும் விடுத்தார். இது பெரும் சர்ச்சையானது. விஜய் மீது ஏராளமான விமர்சனங்கள் விழுந்தாலும், சங்கீதாவையும் விமர்சித்தனர் ரசிகர்களும், தொண்டர்களும். அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் விஜய்க்கு விவாகரத்து விவகாரமும் தலைவலியை கொடுத்து வருகிறது. மறுபுறம், திரிஷாவுடன் விஜய் ஜோடி போட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் விசாரணைக்கும் வரும் என கூறப்படுகிறது.…
கோவை சூலூர் அருகே குப்பை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சிதறிய குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 22 நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நடிகை தமன்னா புடவையில் நடத்திய லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
கோவையில் திமுக நிர்வாகி மற்றும் பெண் தொண்டர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்.
