சம்மர் சீசன் ஆரம்பித்து விட்டது. வெளியே சென்றாலே சருமம் பொசிந்து போகும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்படி கோடை வெயிலில் உடலை நீரோட்டத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், சருமமும் கூடுதல் நீரோட்டத்துடன் இருக்க வேண்டும். நேரடியாக வெயில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது தவிர சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சன் ஸ்கிரீமை பயன்படுத்துவது சிறந்தது. அது மட்டுமின்றி சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியிடம் வைத்துக் கொள்ளும் படியான ஃபேஸ்களை பயன்படுத்தலாம். அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயாரிக்கலாம்.
கற்றாழை

கழுத்து மட்டும் கருப்பா இருக்கா?.. 15 நிமிடத்தில் சரி செய்யும் மேஜிக்..!
கற்றாழை ஜூசை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும். கற்றாழையில் உள்ள பூச்சிக்கொல்லிகள் முகத்தில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு முகப்பரு நீங்கி சருமம் பிரகாசிக்கும்.
எலுமிச்சைச்சாறு மற்றும் வெள்ளரிக்காய்

இவை ஒரு சிறந்த பொருள். இதில் இருக்கக்கூடிய அமிலம் உங்களது சருமத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கரும்புள்ளிகளை நீக்கவும் குறைக்கிறது. எலுமிச்சை சாற்றை முதலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழிவினால் முகம் பொலிவாகும். சிறிது நேரம் கழித்து வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி முகத்தில் வைத்து எடுத்தால் சருமம் மிருதுவாகும். இதனை தினசரி செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் பொலிவுடன் இருப்பதை நீங்கள் உணரலாம்.
ஓட்ஸ் மற்றும் தயிர்

ஓட்ஸில் தயிர் கலந்து முகத்தில் தடவி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்து வர முகம் பளிச்சிடும். மேலும், இறந்த செல்களும் நீங்கி, முகம் பொலிவு பெறும். தயிர் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு வர முகத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
எலுமிச்சைச்சாறு

இயற்கையான வழியில் சருமத்தை பளிச்சிட வைக்க எலுமிச்சை சாற்றுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேத்து விட்டு மிதமான நீரில் கழுவ உங்கள் முகம் தானாகவே பிரகாசிப்பதை நீங்கள் காணலாம்.
பன்னீர் மற்றும் தேன்

தேனில் பன்னீர் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழிவினால் முகம் பொழிவு பெறும். தேனில் உள்ள ஆண்டிபயாட்டிக் கிருமி தொற்றுகள் சருமத்தை பாதுகாக்கும்.
கடலை மாவு மஞ்சத்தூள்

கடலை மாவுடன் மஞ்சள் தூள் அல்லது சிறிது பால் அல்லது நீர் விட்டு கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், முகம் நன்றாக பிரகாசிக்கும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

