Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!
    கோவை

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CSI Bishop Prince Calvin court case Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் தனது நிலையை பயன்படுத்தி தனது மனைவி மற்றும் தான் சம்பாதித்த 175 சவரன் நகை ஆகியவற்றை அபகரித்ததாக கோவை சிஎஸ்ஐ திரு மண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின் மீது திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி அளித்த புகாரின் பேரில் கோவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    நாகர்கோவிலை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரூல்ஸ்வெல்ட். கடந்த 2003 ஆம் ஆண்டு இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஏற்கனவே சில வாகரத்து பெற்றிருந்த ஹைடா செல்வகுமாரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

    72 மணி நேரப் போராட்டம் தோல்வி.. குட்டி யானையை ஆக்ரோஷமாக விரட்டிய ஆண் யானை..!

    ஐடா செல்வகுமாரிக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை இருந்த சூழலில் அந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ரூஸ்வெல்ட் கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததன் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ரூஸ்வெல்டின் மனைவியான ஐடா செல்வகுமாரிக்கும் கோவை சிஎஸ்ஐ திருமண்டல பேராயராக உள்ள பிரின்ஸ் கால்வினுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

    கிறிஸ்தவ தேவாலய விதிகளுக்கு மாறாக அவர்களது திருமணம் நடைபெற்றதாக ஏற்கனவே புகார் எழுப்பப்பட்டு அது குறித்த வழக்கு நடைபெற்று வரும் சூழலில் சிறையில் இருக்கும் தனது நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பேராயர் பிரின்ஸ் கால்வின் தனது மனைவியை அபகரித்ததுடன் தான் சம்பாதித்து வைத்திருந்த 175 சவரன் நகையையும் அபகரித்துக் கொண்டதாக ரூஸ்வெல்ட் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ரூல்ஸ்வெல்ட் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நீதிபதி குற்றச்சாட்டு குறித்து பிரமாண பத்திரம் மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

    கிறிஸ்தவ திருமண்டல பேராயர் மீது ஆயுள் தண்டனை கைதி தனது மனைவி மற்றும் தான் சம்பாதித்த நகைகளை அபகரித்ததாக வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Coimbatore Court Coimbatore News CSI Bishop Jewellery Theft Case Prince Calvin Roosevelt Trichy Central Jail கோயம்புத்தூர் செய்திகள் கோவை நீதிமன்றம் சிஎஸ்ஐ பேராயர் திருச்சி மத்திய சிறை நகை அபகரிப்பு பிரின்ஸ் கால்வின் ரூஸ்வெல்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.