Close Menu
    What's Hot

    5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!

    July 17, 2026

    மாநகராட்சி அரங்கில் மாறிய சுவர்கள்.. முதல்வர்கள் புகைப்படங்கள் திடீர் மாற்றம்..!

    July 17, 2026

    அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இனி பயப்பட வேண்டாம்.. பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பு மைல்கல்: “நிழல்” திட்டம்..!
    கோவை

    இனி பயப்பட வேண்டாம்.. பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பு மைல்கல்: “நிழல்” திட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-nizhal-qr-code-safety-project
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத் தொழில்நுட்பப் பொதுப் பாதுகாப்புத் திட்டம் நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தின் பாதுகாப்புக்கான புதிய உத்தி: தமிழகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கப் புதிய தொழில்நுட்ப அணுகுமுறை அவசியமாகி உள்ளது.​

    இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவசர காலங்களில் காவல் துறையின் சேவையை விரைவாகக் கொண்டு சேர்க்கவும் “நிழல் (Nizhal) – பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற QR குறியீடு அடிப்படையிலான நவீனப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.​

    கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூடுதல் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலால் அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஸ்கேன் செய்தால் போதும்… அடையாளம் 100% ரகசியம்!​இந்த “நிழல்” திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது கைப்பேசியின் (Mobile Phone) கேமரா வழியாக ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல் துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.இத்திட்டத்தின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவெனில், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் (Identity) முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

    வியட்நாம் படகு விபத்து.. திருச்சி இளைஞர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு..!

    பொதுமக்கள் எந்தெந்த குற்றங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம் ?
    ​பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.
    ​கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனை.
    ​சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள்.
    ​பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்.

    24 மணி நேரமும் கண்காணிக்கும் ‘மாஸ்டர் கட்டுப்பாட்டு மையம்’: ​இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Master Command and Control Centre – MCCC) மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.​அங்குப் பணியாற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள், கியூஆர் கோடு மூலம் வரும் தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பித் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    மாவட்டம் முழுவதும் கியூஆர் கோடுகள்

    பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த QR குறியீடுகள் படிப்படியாக நிறுவப்பட உள்ளன.

    இத்திட்டம் காவல்துறையின் அணுகலை மேலும் எளிமையாக்கி, அவசர கால பதில் நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிப்பதுடன், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று கோவை மாவட்ட காவல்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    Coimbatore district SP Coimbatore Police Crime prevention Nizhal project Public safety QR code complaint system QR கோடு புகார் Women Safety குற்றத்தடுப்பு கோவை காவல்துறை கோவை மாவட்ட எஸ்.பி நவீன பாதுகாப்பு நிழல் திட்டம் பெண்கள் பாதுகாப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!

    July 17, 2026

    மாநகராட்சி அரங்கில் மாறிய சுவர்கள்.. முதல்வர்கள் புகைப்படங்கள் திடீர் மாற்றம்..!

    July 17, 2026

    அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!

    July 17, 2026

    TVK உட்கட்சி மோதல்.. பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த கொடூரம்..!

    July 16, 2026

    பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!

    July 16, 2026

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!

    July 17, 2026

    அடுத்த 24 மணி நேரம் 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்கள் எவை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!

    July 17, 2026
    Don't Miss

    5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!

    July 17, 2026

    கோவை மாமன்றக் கூட்டத்தில் செம்மொழி பூங்கா ஊழல் புகாரால் பெரும் கூச்சல் குழப்பம். 5 கவுன்சிலர்களை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் அதிரடி நடவடிக்கை.

    மாநகராட்சி அரங்கில் மாறிய சுவர்கள்.. முதல்வர்கள் புகைப்படங்கள் திடீர் மாற்றம்..!

    July 17, 2026

    அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!

    July 17, 2026

    கடலூர் செல்பவர்கள் தவறவிடக்கூடாத இடம்.. வேண்டிய வரம் தரும் திருச்சோபுரநாதர் கோயில்..!

    July 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.