கோவை அருகே உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி, புழுக்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த மாணவிகள், தரமான உணவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவிகள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதுடன், பலமுறை உணவில் பூச்சி, புழுக்கள் காணப்பட்டதாக தெரிவித்தனர்.
பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் சரிவர உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும், விடுதி மாணவிகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்க கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

