கோவையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் ஏழைப் பெண்மணி ஒருவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிச் சென்ற விபரீதச் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் வெளிப் பகுதியில் தினசரிப் பூ வியாபாரம் செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் எளிய பெண்மணி ஒருவரிடம் நூதன மோசடி அரங்கேறி உள்ளது.வழக்கம் போல அந்தப் பெண்மணி உழவர் சந்தை அருகே பூக்களைக் குவித்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், காரை ஓரமாக நிறுத்தி விட்டுப் பூ வாங்குவது போல நடித்து வள்ளனர்.
அவர்கள் அந்தப் பெண்மணியிடம் வெறும் 100 ரூபாய்க்கு மட்டும் பூக்களை வாங்கிக் கொண்டு, அதற்குப் ஒரு புதிய 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து உள்ளனர்.
காரில் வந்த ‘விஐபி’ போன்ற நபர்கள் என்பதால், அவர்கள் கொடுத்த நோட்டைச் சாதாரணமாக வாங்கிய அந்தப் பெண்மணி, அது கள்ள நோட்டு என்பதை அறியாமல், தனது கைவசம் இருந்த அசல் பணத்தில் இருந்து மீதிச் சில்லறையாக 400 ரூபாயை எடுத்து அவர்களிடம் கொடுத்து உள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்தச் காரில் வந்து கும்பல், அங்கு இருந்து காரை எடுத்துக் கொண்டு சென்று உள்ளனர்.அதன் பின்னர், வியாபாரம் முடிந்து அந்தப் பெண்மணி பணத்தைச் சரிபார்த்த போது தான், காரில் வந்த மர்ம நபர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டு அசல் நோட்டல்ல, அது போலி கள்ள நோட்டு என்பது தெரியவந்து.
அன்றைய நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணமும், கைக்காசும் ஒரே நொடியில் பறிபோனதை எண்ணி அந்த ஏழைப் பெண்மணி கண்ணீர் விட்டுக் குமுறினார்.
பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!
“தினசரித் தனது வாழ்வாதாரத்திற்காக வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டுத் தொழில் செய்து வரும் இது போன்ற விளிம்பு நிலை உழைப்பாளிகளைக் குறிவைத்து, திட்டமிட்டுக் கள்ள நோட்டுகளை மாற்றிச் செல்லும் இது போன்ற கிரிமினல் மர்ம நபர்களைக் காவல்துறை சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடாது.
சிங்காநல்லூர் உழவர் சந்தை மற்றும் திருச்சி ரோடு சந்திப்புகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, மோசடி கும்பல் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து அவர்களை உடனடியாகப் பிடித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

