ஒரு பெண், தனக்குத் தாகம் எடுத்ததால் அருகில் உள்ள கடையில் சீல் வைக்கப்பட்ட (sealed) குடிநீர் பாட்டில் ஒன்றை வாங்கிப் பருகியுள்ளார். பாக்கெட் செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட் (அமிலம்) கலந்திருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தண்ணீர் குடிக்கும்போதே அவருக்குத் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த நீரைத் துப்பிய அவர், பாட்டிலைத் திறந்து பார்த்தபோது அதில் தண்ணீருக்குப் பதிலாக அமிலத்தன்மை கொண்ட திரவம் (Acid) இருந்தது தெரியவந்தது.
பாதிப்பிற்குள்ளான அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட கடையில் இருந்த அனைத்து பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருப்பதி செல்லும் மூத்த குடிமக்களா?.. வரிசையில் காத்திருக்க வேண்டாம்..!
கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தன? இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் தவறுதானா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவரும் குடிநீர் பாட்டில்களை வாங்கும் போது, அவை சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா (original seal) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

