கோவை சுகுணாபுரம் மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள மஞ்சிப்பள்ளம் காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாணமாகவும், அழுகிய நிலையிலும் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குனியமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு சென்று பார்வையிட்டபோது, சுமார் 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நிர்வாணமாக அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த பெண் யார்? அவர் எங்கிருந்து வந்தவர்? கொலை செய்யப்பட்டு உடல் இங்கு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குனியமுத்தூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

