தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
- கடுகு அரை டீஸ்பூன்
- வெந்தயம் கால் டீஸ்பூன்
- சீரகம் அரை டீஸ்பூன்
- நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்
- பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு
- நீளமாக கீறிய மூன்று பச்சை மிளகாய்
- தக்காளி ஒன்று
- மஞ்சத்தூள் அரை டீஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கரம் மசாலா அரை டீஸ்பூன்
- சாம்பார் தூள் ஒரு டீஸ்பூன்,
- சோம்பு கால் டீஸ்பூன்
- தேவையான அளவு தண்ணீர்
- சிறிது கொத்தமல்லி இலைகள்
- ஒரு கொத்து கருவேப்பிலை
- பொட்டுக்கடலை 3 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்
செய்முறை
Step 1: ஒரு வானொலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
Step 2: பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
Step 3:உப்பு, மஞ்சத்தூள், சாம்பார் தூள் மற்றும் கரம்மசாலா சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் வரை வதக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து பின்னர் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மிக்ஸி ஜாரில் போட்டு கடலையை பொடியாக அரைக்கவும்.
மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!
Step 4: அதில், துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து வழுவழுப்பான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
Step 5: பின்னர், மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குருமாவை நன்று கொதிக்க விடவும். இறுதியாக, கருவேப்பிலை மற்றும் நறுக்கி கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும் அவ்வளவுதான் பொட்டுக்கடலை குருமா தயார்.

