வழக்கமான வெங்காய சட்னி, தக்காளி செய்து அலுத்துப்போனவர்களுக்கு, கத்திரிக்காயை வைத்து ஆந்திரா பாரம்பரிய முறையில் காரசாரமாகச் செய்யப்படும் இந்த சட்னி ஒரு சிறந்த மாற்றாகும்.
தேவையான பொருட்கள்
- 10 நீள கத்திரிக்காய்
- 2 தக்காளி
- 8 பச்சை மிளகாய்
- சிறிதளவு புளி
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி
- 1தே.கரண்டி எண்ணெய்
- 1 தே.கரண்டி சீரகம்
- 5 பூண்டுப் பல்
செய்முறை
Step 1: முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்ட வடிவில் நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதை எடுத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும். முதலில் பச்சை மிளகாய் வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Step 2: பின்னர், அதே எண்ணெயில் கத்திரிக்காய்கள் குலைந்து விடாமல் மென்மையாகும் வரையில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து, அதே பாத்திரத்தில் தக்காளிகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step 3: அடுப்பை அணைப்பதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி பிறகு அடுப்பை அணைக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் புளி, பச்சை மிளகாய், சீரகம், பூண்டு பற்கள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும் அரைத்துக் கொள்ளவும்.
சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!
Step 4: இதனுடன் வதக்கிய தக்காளியை சேர்த்து அவை மென்மையாகும் வரை மீண்டும் அரைக்கவும். நறுக்கி கொத்தமல்லியும் சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாக மற்றும் கொரகொரப்பாக அரைத்தால், தான் சுவையாக இருக்கும். இந்த சட்னியை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுந்து சேர்த்து தாளித்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு மட்டும் இன்றி சப்பாத்திக்கும் பிரமாதமாக இருக்கும்.

