டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க.வின் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் எச்சரித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியளித்தபடி முழுப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் த.வெ.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருவதாகவும், காவிரி நீர் வராததால் ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
டம்மி முதல்வர்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து கொந்தளித்த உதயநிதி..!
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிப்பதுடன், குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

