சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 பேர் மூன்று நாட்கள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
கோவை சூலூர் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு – வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதற்கான இறுதி கட்டப் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரே தொடரில் கார்ல்செனை 2 முறை வீழ்த்தி மாஸ்.. பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!
சம்பந்தப்பட்ட வழக்கில் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இரண்டு பேரையும் மூன்று நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையில் இன்று மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் போலீசார் ஆஜர் செய்தனர்.

