வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன அதிசயங்கள் நம் உடலில் நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காண்போம். பொதுவாக வாழைத்தண்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உட்பட ஏகப்பட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளதால், நம்முடைய தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.
மேலும், சளி, இரும்பல் தொண்டை வலி, காது வலி, கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை விஷக்கடிகளுக்கு ஏற்படும் வலிகள் போன்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் வாழைத்தண்டு ஜூஸ் நிவாரணத்தை தருகிறது.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்து இந்த வாழைத்தண்டு ஜூஸ். ரத்த விருத்தி அதிகரிக்க செய்து அத்துடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்க செய்கிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் மோசமான விளைவுகளை தடுக்க முடியும்.
குளு குளு மஞ்சள் தர்பூசணி.. இந்த கோடைக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்..!

வாழைத்தண்டில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், இரும்பு சத்துணை கூட்டுகிறது. வயிற்றில், பலருக்கு அமிலம் சுரந்து எரிச்சலை தந்துவிடும் அத்தகைய அமிலத்தன்மைகளை இந்த வாழத்தண்டு ஜூஸ் கட்டுப்படுத்தி விடுகிறது. நீரிழிவு நோயாளிகளின் சிறந்த நண்பன் இந்த வாழைத்தண்டு ஜூஸ்.

இன்சுலின் அளவுகளையும் ரத்த சர்க்கரையின் அளவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனால், நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கும் போது வடிகட்டாமல் குடிப்பது சிறந்தது. கொழுப்பை உடலில் இருந்து நீக்க வாழைத்தண்டு உதவுகிறது. வயிறு சம்பந்தமான உபாதைகள் இருந்தாலும் நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தாலும் சரி, அதற்கு இந்த வாழைத்தண்டு ஜூஸ் சிறந்த நிவாரணம் தருகிறது.

சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு வாழைத்தண்டு போன்ற தீர்வு எதுவும் கிடையாது. இந்த சாற்றுடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து குடித்து வந்தால் கற்கள் உடைந்து வெளியே வருவதுடன் சிறுநீரகங்களும் ஆரோக்கியம் கிடைக்கும். அல்லது வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிது எலுமிச்சம்பழம் சார்ந்து குடித்தால் நன்மை தரும்.
மொத்தத்தில் சிறுநீரக பாதை தொற்றினால் ஏற்படும் வலியை குறைப்பதற்கு வாழைத்தண்டு சிறந்தது. உடல் பருமன் குறைக்க வாழைத்தண்டு ஜூஸை பருகலாம். ஒன்று அல்லது இரண்டு கப் ஜூஸ் குடித்தால், வயிறு நிரம்பிவிடும்.

உடலில் சிறு சிறு முடி அல்லது நஞ்சு இருந்தால் வெளியேற்றிவிடும். வயிற்றில் நீர் கட்டிகள் இருந்தாலும், அவை அனைத்தையும் இந்த சாறு வெளியேற்றிவிடும். வாழைத்தண்டு ஜூசை வெறுமனே குடிக்க கஷ்டமாக இருந்தால், மோர், ஆப்பில், எலுமிச்சம்பழம் போன்றவற்றுடன் சேர்த்து குடிக்கலாம்.
வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்துவிடும். செரிமானமும் சீராகும். அதேபோல, கல்லீரலும் வளம் பெறும். வேண்டுமானால், இந்த வாழைத்தண்டை காயவைத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்.

கல்லீரல் வலுவடைவதுடன் மஞ்சள் காமாலை நோயும் குணமடையும். குறிப்பாக இந்த வாழைத்தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால், வயதானவர்கள் மட்டும் வாழைத்தண்டை உணவில் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

