தயிர் சாதம் என்னமோ ஈஸியான ரெசிபி தான் ஆனால், கோவில் ஸ்டைல்ல தயிர் சாதம் செய்வது சவாலான விஷயம் தான். தயிர் சாதம் செய்வதற்கு தயிர் அதிகமாக புளித்திருக்கக் கூடாது. பிரஷ் ஆன தயிரில் செய்வது அதிக சுவையை தரும். கடைகளில் தயிர் வாங்கி செய்வதை காட்டிலும் நம் வீட்டில் உறை ஊற்றி வைத்து செய்வது மிகுந்த ஆரோக்கியமானதாக சுவை மிகுந்ததாகவும் இருக்கும். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற உடலுக்கு குளிர்ச்சியான கிரீமியான கோவில் ஸ்டைல் தயிர் சாதம் செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- 300 கிராம் அரிசி
- 150 கிராம் தயிர் சிறிதளவு
- இஞ்சி சிறிதளவு
- பச்சை மிளகாய் சிறிதளவு
- வத்தல் தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கடுகு தேவையான அளவு
- மிளகு தேவையான அளவு
- கருவேப்பிலை தேவையான அளவு
- மல்லித்தழை தேவையான அளவு
- உப்பு
செய்முறை
Step 1: முதலில் அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்து ஊறிய அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி குழைந்து வரும் வரை மென்மையாக வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்து வந்தவுடன் வடிகட்டி சூடான பாத்திரத்தில் ஒரு கரண்டியை வைத்து நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
சுடச் சுட சாதத்திற்கு ‘சுட்ட மாங்காய் ரசம்’ – ஸ்மோக்கி பிளேவருடன் அசத்தல்..!
Step 2: ஒரு வானொலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், வத்தல், இடித்த மிளகு சேர்த்து வதக்க வேண்டும். சுத்தமான பசும்பாலில் இருந்து எடுத்த தயிரை அடித்து தயிர் சாதத்தில் இதனை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
Step 3: பின்பு அதனுடன் தாளிப்பை சேர்த்து தேவையான அளவு மல்லி தலையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான கிரீமியான கோவில் ஸ்டைல் தயிர் சாதம் ரெடி.
டெக்கரேஷனுக்கு தேவையானால் மாதுளம் பழம், வெள்ளரிக்கா, திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

