Browsing: கோவை செய்திகள்

கோவை பாலமலை ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்; சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு வணிகமாக மாறிவிட்டதாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம், ஜூன் 4 தேர்தல் முடிவுகளே மக்களின் இறுதியான தீர்ப்பு என்று கோவையில் பேட்டி அளித்தார்.

கோவை கண்ணப்பநகர் டாஸ்மாக் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் மதுப்பிரியர்கள் மீது ஆயில் தெறித்து தீ விபத்து; 3 பேர் காயம், ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

கோவையில் 2013-ல் பென்ஷன் நிலுவைத்தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கருவூல கணக்காளர் பழனிச்சாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடத்தப்பட்டது.

மின்மாற்றி கொள்முதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் விரிவான விளக்கமளித்தார்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சக்தி கரகம் மற்றும் அக்னி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் பணி 4-வது நாளாக நீடிக்கிறது; வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர தேடுதல்.

தங்கை மற்றும் அவரது கணவர் சேர்ந்து தனது பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அண்ணன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.