Browsing: தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில் வாடகை செலுத்தாத நகராட்சிக்குச் சொந்தமான 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர். இதில் கட்சி அலுவலகமும் அடங்கும்.

மதுரை வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே தனியார் மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசில் புகார் அளிக்கப்படவில்லை.

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் செல்லும் வழியில் அரசுப் பேருந்து பஞ்சரானதால் சென்டர் மீடியத்தில் ஏறி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் மட்டுமே நடப்பதாகவும், இதில் முறைகேடுகளுக்கு இடமில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“நானும் ஒரு அரசுப் பள்ளி மாணவிதான்” என்று கல்வித்துறை அமைச்சர் கீர்த்தனா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளது, அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை 2027 ஜூலை 5 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இதோ.