தமிழக நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் (Marie Wilson) சட்டப்பேரவையில் பேசிய பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, சட்டப்பேரவையில் பட்ஜெட் வாசிக்கும் போது தமிழ் வார்த்தைகளையும், எண்களையும் உச்சரிக்கத் திணறியது குறித்தும், பின்னர் அது குறித்துப் பேசியது தொடர்பாகவும் அமைச்சர் மரியா வில்சன் மீது சீமான் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!
தான் கிறிஸ்தவ மதத்தில் பிறந்ததாகவும், தன் மதம் தனக்கு அன்பைக் கற்றுக்கொடுத்தது என்றும், ஆனால் தமிழ் மொழி தனக்கு அன்பைக் கற்றுக்கொடுக்கவில்லை என்பது போல அமைச்சர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மொழி அன்பைப் போதிக்காது என்று கூறிய அமைச்சரை நோக்கி, “உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே!” என்று சீமான் மிகக் கடுமையான வார்த்தைகளில் சாடியுள்ளார்.
தமிழ்த்தாயும், தமிழ் மொழியும் எல்லையற்ற அன்பின் அடையாளமே தவிர, அதைக் குறைகூறுவது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாள அவமதிப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், மரியா வில்சன் தனது பேச்சுக்குச் சட்டப்பேரவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

