கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு (2025) கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான தமிழக அரசு, பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியது. இந்த பணி நியமனங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இது அரசியலமைப்புச் சட்டத்தின் சம உரிமைக்கு முரணானது எனக் கூறி, அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
எடை குறைக்கணுமா? இந்த சூப்பர்ஃபுட் ஸ்நாக்ஸ் பத்தித் தெரியுமா?..
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது அரசின் கொள்கை முடிவு; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி, மதுரை கிளையின் தீர்ப்புக்கு இன்று (ஆகஸ்ட் 14) இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

