தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மற்றும் நிர்வாகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார். அதில், தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக, தவெக அரசு மற்றும் அதன் நிர்வாக நடைமுறைகளைக் கடுமையாகக் விமர்சித்து அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக தலைமையின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தவெக மீதான எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எழும் வெற்றுப் புகார்கள் என்றும், தவெக அரசு மக்களின் நல்வாழ்வுக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சியான அதிமுகவும், ஆளுங்கட்சியான தவெகவும் பரஸ்பரம் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!
குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தவெக மீது அவதூறுகளைப் பரப்புவதாகக் கூறியதோடு, தேவையற்ற கருத்துக்களைத் தொடர்ந்தால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக தலைவர்கள் எச்சரித்தனர்.

