Browsing: தமிழ்நாடு

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அதிகளவில் ஒலிக்க வேண்டும் என்றும், அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகு என்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டமன்றம் என்பது வெறும் விவாதக் கூடம் மட்டுமல்ல, அது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழ வேண்டும் எனத் தனது முதல் சட்டமன்ற உரையில் முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தினார்.

அரசு நிர்வாகத்தை நடத்துவதில் திமுக அனுபவம் வாய்ந்த மூத்த கட்சி என்றும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். கோயம்பேடு மேம்பாலத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

சட்டமன்றம் இனி ஜனநாயக முறையில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அவர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, முதல்வர் விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்ற பாரம்பரிய பண்பாட்டைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார்; “தம்பி” என அழைத்து சீமான் வாழ்த்து.

முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு நல்ல தொடக்கம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் டெல்லி பயணம்; பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல்.

மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோவைத் தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார்; அரசியல் நாகரீகத்தின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.