முதலமைச்சர் பதிலுரைக்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் கடும் கோஷங்களை எழுப்பினர்.
கர்நாடகாவின் தந்திரம்.. உச்ச நீதிமன்றத்தை நாடத் துணியும் தமிழக அரசு..!
முதலமைச்சர் உரை முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் உறுதியளித்தும், திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக, முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

