Author: Prime Reporter

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு நுழைந்துள்ள இந்த நேரத்தில் விஜய் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுவும் சங்கீதா சொன்ன காரணங்கள்தான் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த நிலையில் விஜய் மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் திட்டி, ஆபாசமாக பேசி நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். தவெக தொண்டர்கள் சிலரும் இதில், சங்கீதா குறித்து விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், சங்கீதா குறித்து அவதூறு பரப்பும் தவெக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய விஜய்க்கு அனைத்திந்திய தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில்,…

Read More

தாய் கிழவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் அதிரிபுதிரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கிய திரைப்படம் தாய் கிழவி. ட்ரெய்லரே மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். படமும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய படங்கள் இல்லாத நிலையில் தாய் கிழவி 50 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என கூறப்படுகிறது. தாய் கிழவி படத்துக்கு போட்டியாக வெளியான விஜய்யின் ரீ ரிலீஸான் தெறி படமும், சரத்குமாரி ஆழி திரைப்படமும், ஆரியின் FOURTH FLOOR படங்கள் செம அடி வாங்கியுள்ளன. தாய் கிழவி படம் 3 நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டியளள்தாக சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெறும் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், ரூ.50 கோடி வசூலை தாண்டும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும்…

Read More

அவசரகதியில் போடப்பட்ட புதிய தார் சாலை மழையால் பெயர்ந்து போனதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை கோரினர்

Read More

அரசுப்பள்ளி மாணவர்களின் விமானப்பயண கனவு நனவாகி முதல் முறையாக பறந்த அனுபவம் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது.

Read More

தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரும் பள்ளி நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது.

Read More

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று வந்திருந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட முஸ்லீம் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் வருகையின் போது மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பேணி கட்டுக்கோப்பாக வைத்திருப்பதைவிடுத்து, மாநிலத் தலைநகரிலேயே போராட்டங்கள் நகைபெறும் அளவிற்கு காவல்துறை மெத்தனமாக செயல்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் பாசிச கரம் கொண்டு ஒடுக்கிவிட்டு, நேற்று தலைநகரின் முக்கிய இடத்திலேயே சிலர் போராட அனுமதித்துள்ளது திமுக அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது. மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசு தனது இந்த இரட்டை வேடத்தாலேயே அழியும் நாள் தொலைவிலில்லை! இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

உணவில் உப்பு அதிகமாக சேர்த்தால் உடல்நல பிரச்சனைகள் அதிகரித்து இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயம் உயரும் என்பதை தினமும் சரியாக கட்டுப்படுத்த கவனிக்க வேண்டும்

Read More

பீர்க்கங்காயை பயன்படுத்தி சுலபமாக வீட்டிலேயே குருமுருப்பான பஜ்ஜி செய்வது எப்படி என்பதை இந்த ரெசிபியில் பார்ப்போம்.

Read More

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்டிருப்பதும், அவர்களைக் கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது. நாட்டை வழிநடத்திச் செல்லும் பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கும் வேளையில், அவரது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் விதமாகவும், அவரை இழிவுபடுத்தும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் வேளையில், அதைக் கண்டுகொள்ளாத அளவிற்கு, திமுக அரசின் கண்ணை அரசியல் காழ்ப்புணர்ச்சி மறைத்துவிட்டதா? ₹4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழகத்திற்குப் பிரதமர் அவர்கள் வழங்கியதற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, அடிப்படை சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? உண்மையில், இதுபோன்றதொரு செயலில் ஈடுபட்ட காங்கிரஸைக் காட்டிலும், அதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியம் பெரும் கண்டனத்திற்குரியது.…

Read More