Author: Prime Reporter
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறைக்கென தலைவர் ( DGP ) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான…
கோவையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி, இளைஞர் காரின் கூரை மீதே பறந்து விழுந்த திக் திக் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
விஜய் இமேஜை கெடுக்க திமுக முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். கட்சி முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இதனால் விஜய்க்கு ஆதரவு அதிகமானது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளது என்றும், அரசியலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என சமீபத்திய கணிப்புகள் கூறின. இதனிடையே தான் விஜய் மீது தினம் தினம் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. காரணம், விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான். 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக பகீர் கிளப்பினார். ஒரு புறம் விஜய் மீது விமர்சனங்கள் எழு, 2021ல் பிரிந்து வாழ்வது என்றால் அவர் அரசியலில் நுழைந்த பின்னர் விவாகரத்து மனு எதற்கு என்ற கேள்வியையும்…
தலைப்பேன் தொல்லையை அடியோடு ஒழிக்க இயற்கை வழிகள், எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் காக்கும் வழிமுறைகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.
விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார். ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி…
கருப்பு கவுனி அரிசி பல சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவு. உடல் நலம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது.
சிவப்பு கவுனி அரிசி உடலுக்கு பல நன்மைகள் தரும் பாரம்பரிய அரிசி வகை. இதன் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்ப்டடுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 உயர்ந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி பட்டும் படாமல், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இதுவரை ரூ.868.50 ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.928 ஆக அதிகரித்திருக்கிறது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு…
மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தை சேர்ந்த காவலரின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது! அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களைக் காப்பதற்காக சீருடையணிந்த காவலர்களே குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது. போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பைக் களவாடும் கயவர்கள்!சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி…
திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது, இதற்கு திமுக அரசுக்கு கண்டனம் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக – காங்கிரஸ்…
