நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? தலைமுடியின் வலிமையும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், தலைமுடியின் மயிர் கால்களுக்கு ஊட்டுமளிக்கக்கூடிய எண்ணெய்களை கொண்டு பராமரிக்கலாம்.

முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!
பழங்காலத்திலிருந்து நமது முன்னோர்கள் பயன்படுத்தி ஒரு பொருள்தான் கற்றாழை. இந்த கற்றாழையில் வைட்டமின்கள் கனிமசத்துகள் அமினோ அமிலங்கள் நொதிகள் போன்றவை அதிகமாக இருக்கிறது. இவை ஸ்கால்ப்பிற்கு ஆழமாக ஊட்டம் கொடுத்து மயிர்க்கால்களை வலுவடைவும் செய்கிறது.
கற்றாழை எண்ணெய்
கற்றாழை எண்ணெய் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போன்ற பல பொருட்களை கொண்டுள்ளது. இவை மயிர் கால்களை பாதுகாத்து அவற்றை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கற்றாழை முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் சான்றுகளும் தற்போது வரை இல்லை. ஆயினும், அதில் உள்ள வேதிப்பொருள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக பலரும் நம்புகின்றனர்.

கற்றாழை எண்ணெய் செய்முறை
தயாரிப்பதற்கு முதலில் கற்றாழை இலைகளை எடுத்து நீரில் நன்றாக கழுவி உலர்த்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கூர்மையான முனைப்பகுதியை விட்டு அதன் கண்ணாடி போன்ற தசை பகுதிக்கு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பேனில் இரண்டு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் துண்டுகளாக்கப்பட்ட கற்றாழை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் போது நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். பிறகு அதில் கற்றாழை துண்டுகளை நீக்கி விட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும் இப்போது கற்றாழை எண்ணெய் தயார்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

