சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன.

சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்ற நினைப்பவர்கள், விலையுயர்ந்த அழகுச் சாதனப் பொருட்களைத் தேடிப் போவதை விட, தினசரி உட்கொள்ளும் உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். நம் வீட்டில் இருக்கும் எளிய உணவுப் பொருட்கள் மூலமே தோலின் மினுமினுப்பை அசாத்தியமாக அதிகரிக்க முடியும். நம் வீட்டில் சமையல் அருகிலே வரும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்கள் இருக்கின்றன. அதில், ஒன்றுதான் பாசிப்பருப்பு.
முடி கொட்டுகிறதா?.. இத பண்ணுங்க 2 மடங்கு வேகத்தில் கூந்தல் வளரும்..!
- இந்த பாசி பருப்பு மாவை கொண்டு சரும பராமரிப்பை மேற்கொள்ளலாம். அதற்கு, ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் பாசி பருப்பு அத்துடன் அரை டீஸ்பூன் தேன் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்பு அதனை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்றும்.

- பாதி அளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில், ரெண்டு டீஸ்பூன் பச்சைப்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வெயிலில் கருமையான சருமத்தையும் வெள்ளையாக்கும். வெயிலால் பாதிக்கப்பட்ட கருமையான சருமத்தையும் வெள்ளையாக்கும்.
- ஒரு டீஸ்பூன் பச்சை பருப்பு மாவு எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

- இந்த ஃபேஸ் பேக் சரும வறட்சியை போக்கும். முகப்பருவை தடுக்கும் பொலி விழுந்த சருமத்தையும் பிரகாசமாக்கும். ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் பச்சை பருப்பு மாவு எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பா அதனை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அடுத்து முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தில், உள்ள சுருக்கங்களை நீக்கும்.
- பச்சை பருப்பு மாவுடன், பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் காய வைக்க வேண்டும். அடுத்த, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை தடுக்கும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

