நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? தலைமுடியின் வலிமையும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், தலைமுடியின் மயிர் கால்களுக்கு ஊட்டுமளிக்கக்கூடிய எண்ணெய்களை கொண்டு பராமரிக்கலாம்.
தேங்காய் எண்ணெய்

வயதான தோற்றத்திற்கு இனி குட்பை சொல்லுங்க.. மேஜிக் ஃபேஸ் பேக்..!
விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தும் போது தலைமுடி இருமடங்கு வேகத்தில் வளரும். ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் ஸ்கேல்பில் படும்படி தடவி சிறிது மசாஜ் செய்ய வேண்டும். பின்பு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் தலைமுடி அலாச சிறந்த பலனை பெறலாம்.
பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது. இது தலைமுடி மெலிவதையும் தலைமுடி உதிர்வதையும் தடுக்கிறது. இந்த பாதாம் எண்ணையை விளக்கெண்ணெயுடன் சரிசம அளவில் கலந்து மென்மையான மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் இதனை அப்படியே வைத்துவிட்டு மறுநாள் காலையில் மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலாசலாம்.
ரோஸ்மேரி ஆயில்

ரத்த ஓட்டத்தை தலை முடியின் சருமத்தில் அதிகரித்து வளர்ச்சி ஊக்குவிக்கிறது. சில துளிகள் விளக்கெண்ணெயுடன் கலந்து ஸ்கால்ப்பில் தடவி, மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடி அலாசலாம். இந்த எண்ணெய் கலவை அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணையை கலந்து தலைமுடிக்கு தடவி வர பட்டு போன்று மென்மையாக இருக்கும். இந்த எண்ணெயை இரவு முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடி அலாசலாம்.
ஜோஜோபா ஆயில்

ஒரு பவுலில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஜோஜோபா ஆயிலை ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ்க்கு பின்னர் தலையில் மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தடையலாசலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

