Author: Prime Reporter
இயக்குநர் ஷங்கர் தற்போது புதிய வரலாற்றுப் பின்னணியிலான ஒரு பிரம்மாண்டத் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற “வேள்பாரி” நாவலை திரைப்படமாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியுள்ள நிலையில், அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரலாற்றுப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான வேள்பாரியாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் நடிப்புத் திறன் மற்றும் கதாபாத்திரத்தில் உயிர் ஊற்றும் திறனை கருத்தில் கொண்டு அவரை தேர்ந்தெடுத்தாக இயக்குநர் ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில், படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “சாவா (Chaava)”, “கேசரி (Kesari)” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விக்கி…
நடிகர் Arjun Das இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உணர்ச்சி பதிவு ரசிகர்களிடம் பரபரப்பு; காதல் தோல்வியா என சமூக வலைதளங்களில் விவாதம்.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை நான் பணிவுடன் ஏற்கிறேன் என மாணிக்கம் தாகூர் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெறுப்பு அரசியல் எந்த வடிவிலும் நிறுத்தப்பட வேண்டும். ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்க நாம் செய்யும் தியாகங்கள் எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் வெறும் யார் எம்.எல்.ஏ., யார் அமைச்சர் என்பதைக் தீர்மானிப்பதற்காக மட்டுமல்ல. வெறுப்பையும் பிளவையும் நம்பும் அரசியல் சக்திகள் ஆட்சிப் பதவிகளில் அமர அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாகும். எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பிற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்பிக்கையின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுக்கும், அகில இந்திய பொதுச் செயலாளர் கேசி. அவர்களுக்கும், ஏஐசிசி பொறுப்பாளர் எனது சகோதரர்…
‘தாய் கிழவி’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வைரல்; அதில் நடிகர் Vijay Sethupathi குறித்து கலாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து.
நடிகர் விஜய் மற்றும் பார்த்திபன் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், எதையும் பொருட்படுத்தாமல் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
திமுக அரசு குறித்து விமர்சித்து அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே! உங்களுக்கு சில கேள்விகள்.. தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகப் போகிறது, ஆனால் இன்றுவரை பிரேத பரிசோதனை நடந்து முடியவில்லை, அறிக்கை வெளிவரவில்லை.. கரூர் விவகாரத்தில் 41 உயிர்கள் பலியான போது ஒரே இரவில் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்ய முடிந்த ஸ்டாலின் மாடல் அரசால், ஒரு சிறுமி… ஒரேயொரு சிறுமி, அவருக்கு நான்கு நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை ஏன் இன்னும் செய்ய முடியவில்லை? எப்படி அந்த சிறுமி இறந்தார்? ஏன் இறந்தார்? யாரால் இறந்தார்? இப்படி எந்த கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை. நான்கு நாட்கள் ஆகியும் கூட இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யார் என்பதை விடியா அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதெல்லாம் பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு…
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க…’ என்று வலியுறுத்திவிட்டு ஆசிரியர்களே இல்லாமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதலமைச்சர் அவர்களே என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்… அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்… அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா. கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும்…
கோவையை மெருகூட்ட நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் பெருமையை விளக்கும் பிரம்மாண்ட அடையாளச் சிலையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர்.
மாடர்ன் உடையில் நடிகை ஹன்சிகா மோத்வானி எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
