Close Menu
    What's Hot

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!
    கோவை

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-pudur-neet-student-suicide-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த 19 வயது மாணவி ஒருவர் உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்-அப் செய்தி அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான அனுகீர்த்தனா, எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பை சிறப்பாக முடித்திருந்தார்.சிறு வயதிலிருந்தே மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இருந்த அனுகீர்த்தனா, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி தேர்வும் எழுதியிருந்தார்.

    மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சைகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.இந்த சூழல் மாணவியை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

    மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டால் தன்னால் விரும்பிய மதிப்பெண்களை பெற முடியுமா என்ற அச்சமும், தனது நீட் பயிற்சிக்காக தந்தை லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதும் அவரை மனரீதியாக பாதித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் நீண்ட உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், “நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர காத்திருந்தேன். தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பயமாக இருக்கிறது. எனக்காக தந்தை அதிகம் செலவு செய்துள்ளார். அவருடைய முகத்தை இனிமேல் எப்படி பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என தனது மனவேதனையை வெளிப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    அந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அனுகீர்த்தனா விஷம் அருந்திய நிலையில் மயக்கத்துடன் கிடந்ததாக கூறப்படுகிறது.
    உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் அனுப்பிய வாட்ஸ்-அப் செய்திகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவி, மீண்டும் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு தொடர்பான குழப்பங்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
    மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் போராடிய மாணவியின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் கல்வி வட்டாரங்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

    Anukeerthana Suicide Case Pudur Coimbatore Local News 2026 Coimbatore NEET Student Suicide Kuniyamuthur Police Investigation NEET Controversy Impact Tamil Nadu NEET Exam Stress Student Death Student Mental Health Issues அனுகீர்த்தனா தற்கொலை கோவை புதூர் குனியமுத்தூர் போலீஸ் விசாரணை கோவை உள்ளூர் செய்திகள் 2026 கோவை நீட் மாணவி தற்கொலை டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் மகள் நீட் தேர்வு மன அழுத்தம் நீட் வினாத்தாள் சர்ச்சை பாதிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!

    June 16, 2026

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Don't Miss

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன் சுமை ₹13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.