பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் பொருத்தமான, நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான உருளைக்கிழங்கு குருமாவை மிக எளிதாக வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 3 (வேகவைத்து, மசித்தது)
- வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 3
- கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
- மஞ்சள் தூள், மிளகாய் தூள் – தலா 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – அரைக் கரண்டி
- உப்பு, எண்ணெய், கொத்தமல்லி – தேவையான அளவு
- அரைத்துக்கொள்ள வேண்டிய மசாலா:
- தேங்காய் துருவல் – அரை கப்
- பொட்டுகடலை – 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 2 பற்கள்
- பட்டை, கிராம்பு – தலா 1
செய்முறை
Step 1: முதலில் அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய், பொட்டுகடலை, சோம்பு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!
Step 2: வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குலைய வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும். கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றவும். கூடவே வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். (தேவைப்பட்டால் கூடுதல் தண்ணீர் சேர்க்கலாம்).
Step 3: கடாயை மூடி போட்டு மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். குருமா திக்கான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். இறுதியாக, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் எலுமிச்சை சாறு தூவி இறக்கினால், வாசனையான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா தயார்.
எலுமிச்சை சாறு சேர்ப்பது குருமாவுக்கு ஒரு தனித்துவமான புளிப்புச் சுவையையும், மணத்தையும் தரும். விருப்பமில்லாதவர்கள் இதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

