அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுச்சாமியின் மாமியார் ரங்கம்மாள் அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார்.அவரது மறைவுச் செய்தியறிந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த ரங்கம்மாள் இரங்கல் தெரிவிக்க முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பி.வேலுமணி அவர்கள் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள இராவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இல்லத்திற்கு இன்று வருகை தந்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த ரங்கம்மாள் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது மரியாதையைச் செலுத்தினார்.
ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!
அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து கைகளைப் பற்றி ஆறுதல் கூறினார். மேலும், இந்த ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் துணிவை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என இறைவனை வேண்டி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வின் போது, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பலர் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.

