‘புட் சட்னி’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி, தற்போது தமிழகத்தின் கல்வி மற்றும் சினிமா துறை அமைச்சராக இருக்கும் ராஜ்மோகன், சமீபத்தில் நடந்த ஒரு கல்வி விழாவில் முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து யூடியூபில் கஷ்டப்பட்டு ஒரு இடத்தை பிடித்தேன். பணம், வீடு, கார் என எல்லாம் சம்பாதித்துவிட்டேன். ஆனால், முதலமைச்சர் விஜய் என்னை ‘மாண்புமிகு அமைச்சர்’ ஆக்கிய பிறகுதான் எனக்கு உண்மையான மரியாதை கிடைத்துள்ளது. இப்போது செல்லும் இடமெல்லாம் மக்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் என்னை ஒரு சொந்த மாமா போல பார்க்கிறார்கள்.
விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!
பள்ளிகளில் “PET பீரியட்” (உடற்கல்வி வகுப்பு) எக்காரணம் கொண்டும் கட் செய்யப்படக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் படிப்பதோடு மட்டுமல்லாமல் விளையாடவும் வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நம் மாநிலப் பள்ளிகளில் இருந்து ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் போன்றவர்கள் உருவாவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரண யூடியூபராக இருந்து, இன்று தமிழகத்தின் கல்வி அமைச்சராக உயர்ந்துள்ள ராஜ்மோகனின் இந்த உரையையும், அவரை இந்த நிலைக்கு உயர்த்திய முதலமைச்சர் விஜய்யையும் தவெக கட்சியினரும் ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

