நம்மில் பலருக்கு டீ குடிப்பது என்பது ஒரு எமோஷன். ஆனால், அந்த டீயுடன் சேர்த்து நாம் சாப்பிடும் சில உணவுகள், ஆரோக்கியமான தேநீரைக் கூட ஒரு ஆபத்தான பானமாக மாற்றிவிடுகின்றன. தேநீரின் முழு நன்மைகளும் கிடைக்க, அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 முக்கிய உணவுகள்.
அந்த 5 ஆபத்தான காம்பினேஷன்கள்
பஜ்ஜி, சமோசா (கடலை மாவு உணவுகள்)
நம்மில் பலருக்கும் டீயுடன் பஜ்ஜி, சமோசா சாப்பிடுவதுதான் பிடிக்கும். ஆனால், கடலை மாவு மற்றும் பொரித்த உணவுகள் டீயில் உள்ள டானின்களுடன் இணையும் போது செரிமானத்தைக் கெடுத்து, வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து & புரோட்டீன் உணவுகள்
பயறுகள், பருப்பு மற்றும் கீரை வகைகளை சாப்பிட்ட உடனே டீ குடித்தால், டீயில் உள்ள டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் அந்த உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சவிடாமல் தடுத்துவிடும்.
சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு)
டீ குடித்த உடனே சிட்ரஸ் பழங்கள் அல்லது பழ சாலட்களைச் சாப்பிட்டால், அது வயிற்றில் அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து, செரிமானக் கோளாறை உண்டாக்கும்.
பால் மற்றும் தயிர் பொருட்கள்
டீ குடிக்கும் போது முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் அல்லது தயிர் சார்ந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது, டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் வீரியத்தைக் குறைத்து செரிமானப் பிரச்சினையைத் தரும்.
அதிக காரமான உணவுகள்
காரமான உணவுகள் டீயின் துவர்ப்புத் தன்மையுடன் சேரும்போது, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை (Heartburn) எளிதாக வழிவகுத்துவிடும்.
இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையோ அல்லது பழங்களையோ சாப்பிட்ட பிறகு, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து தேநீர் அருந்துவதே உடலுக்கு நல்லது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

