வனத்துறை தண்ணீர் தொட்டியில் நடந்த பரபரப்பு… செய்வதறியாது துள்ளிக் குதித்த மானின் வைரல் வீடியோ.கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், பன்னிமடை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப்புறத்தில் தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான் ஒன்றை, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கூட்டம் அச்சுறுத்தும் வகையில் சுற்றி வளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனத் துறையினர் அமைத்து உள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகே நடந்த இந்த திக் திக் காட்சிகளை, அங்கு இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி விளைநிலங்களையும், மனித குடியிருப்புகளையும் நோக்கி வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டும், வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டும் வனத்துறையினர் காடுகளின் எல்லையோர பகுதிகளில் ஆங்காங்கே செயற்கைத் தண்ணீர் தொட்டிகளை அமைத்துப் பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று பன்னிமடை வன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள வனத்துறையின் தண்ணீர் தொட்டிக்கு, காட்டில் இருந்து வெளியேறிய புள்ளி மான் ஒன்று மிக நீண்ட நேரத் தாகத்துடன் நீர் அருந்துவதற்காக அங்கு வந்து உள்ளது.
மான் தண்ணீர் தொட்டியில் நீர் அருந்த முயன்ற அந்தச் சமயத்தில், கிராமப்புற எல்லையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கூட்டம் திடீரென மானைச் சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாகக் குறைக்கத் துவங்கி உள்ளது.இதனால் செய்வதறியாது திகைத்த அந்த மான், பயத்தில் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஓட முயன்றது.
ஒருபுறம் நாய்களின் அச்சுறுத்தல், மறுபுறம் தொண்டையை வறட்டும் கடுமையான தாகம் என இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவித்த அந்த மான், எதற்கும் அஞ்சாமல் சாதுரியமாகத் தனது தாகத்தை அவசர அவசரமாகத் தணித்துக் கொண்டு, நொடிப் பொழுதில் அங்கு இருந்து தப்பியோடி மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்று உள்ளது.
பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!
இதனை அந்தப் பகுதியில் நின்று கொண்டு இருந்த உள்ளூர்வாசி ஒருவர் தனது மொபைல் கேமராவில் துல்லியமாக படம் பதிவு செய்து உள்ளார்.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

