பொதுவாக எந்த பொருட்களை உட்கொண்டாலும், அதை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதனுடைய பலன் தெரிய வரும். அப்படியாக நம்முடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய மசாலா பொருட்கள் நம்முடைய உணவின் சுவையை அதிகரிப்பதோடு, மருத்துவ ஆரோக்கியத்தையும் நமக்கு மேம்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கின்றன.
அதில், ஒன்று வெந்தயம். ஆயுர்வேதத்தின்படி வெந்தயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பொதுவாக, வெந்தயம் ஒருவருடைய உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. அதை போல், செரிமானத்தை மேம்படுத்துகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. வாயு தொல்லையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இருப்பினும் வெந்தயத்தை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், எப்படி எடுத்துக் கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

கோடை காலங்களில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும்போது அவை நம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். வெந்தயம் இது வாத மற்றும் கபதோஷங்களை சரி செய்ய பயன்படுகிறது. ஆனால், கோடை காலத்தில் உடலில் இருக்கக்கூடிய பித்த தோஷத்தை அதிகரிக்கும் என்றே சொல்வார்கள். அதனால், கோடை காலங்களில் அதிகப்படியான வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நம்முடைய உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு சில கூடுதல் பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.
ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!
கோடை காலங்களில் நம்முடைய உடலில் பித்த தோஷம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் நாம் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும்போது ஒரு சிலருக்கு வயிற்றில் எரிச்சல் அமிலத்தன்மை மலச்சிக்கல் மற்றும் அசோகியம் போன்ற பிரச்சினைகள் கூடும். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளியை பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி வெந்தயத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், கோடை காலத்தில் உடலின் நிலைமை மாறுபடுவதால் வெந்தயத்தை உட்கொள்ளும்போது உடல் பலவீனம் அடைந்து, தலை சுற்றல் அல்லது குளிர்ந்த இரத்த சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

அதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலும், கோடை காலங்களில் வெந்தயத்தை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது. பொதுவாக, வெந்திய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
இது விதைகளின் சூட்டை குறைக்க உடல் அவற்றை எளிதில் ஜீரணம் செய்ய உதவுகிறது. அதேபோல், வெந்தயம் பொடியை தயிர் அல்லது மோருடன் கலந்து குடிப்பதுடன் சிறந்த நிவாரணமாகவும் அமைகிறது. இது உடலை குளிர்விப்பதோடு வயிற்றில் ஏற்படுகின்ற எரிக்களையும் குறைக்கிறது.

இருந்தாலும், கோடை காலங்களில் தவறியும் வெந்தயம் விதைகளை சூடு நீரிலோ அல்லது வேக வைத்தோம் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக வெந்தயத்தில் அதிகப்படியான பலன்கள் இருந்தாலும், சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்குரிய பலன்களை பெற முடியும். வெறும் வயிற்றில் முடிந்த அளவிற்கு வெந்தயம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

