தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. தமிழ்நாட்டில் மூன்று கோடி மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக்கழக ஆட்சி 65 சதவீத மக்கள் நிராகரித்துள்ளனர். மிக முக்கியமாக தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
விஜய் அரசுக்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு.. ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கோவை’ கோட்டை..!
ஆளுங்கட்சிக்கு 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். தமிழக வெற்றிக்கழகத்திற்கு நிகராக 3.21 கோடி பேர் வாக்களித்தனர். தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும்.
தனது வெற்றி மீது நம்பிக்கை இல்லாமல் இரு இடங்களில் முதலமைச்சர் போட்டியிட்டு உள்ளார். கம்யூனிஸ்ட் விசிக ஆயுதம் கட்சியினர் திமுக கூட்டணியில் தான் உள்ளனர். வெளியிலிருந்து தான் ஆதரவு தருகின்றனர். குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால், திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன ஒரு எம்எல்ஏ வை கட்சி தலைவருக்கே தெரியாமல் ஆதரவு அளிக்க வைத்துள்ளனர். புதிய ஆட்சி புதிய ஆட்சி என்று கூறுகிறீர்கள். அதிமுக பிளவு பட்டுள்ளது.
அதில், ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்கு பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட் அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோபா செல்கிறது. பின்னாடியே, புதிய முதலமைச்சரும் செல்கிறார். புஷ்பாபு பட பானில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்திருந்தார். தமிழக வெற்றி பெற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பதாக தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார்

