தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்தவுடன் எஸ் பி வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுகவின் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும்.. அனல் பறக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு..!
ஒரு கட்சிக்கு ஒருவரை பேச வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூற்று கேட்டதால், சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் விளக்கம் அளித்தார் சபாநாயகர் இது குறித்து கூறுகெ எழுதிய யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்வது எனது உரிமை சட்டசபையில் கட்சி தலைவர் எடுப்பது முடிவல்ல சபாநாயகர் ஆன நான் எடுப்பதுதான் முடிவு பேச வாய்ப்பு தாருங்கள் என எஸ் பி வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளது.
அவரை பேச அனுமதித்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, பேசிய எஸ் பி வேலுமணி ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும் நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் இல்லை என்று மக்கள் தீர்ப்பை ஆதரித்து தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அதிமுகவில் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

