தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, சட்டசபை மரபுகளை கடைபிடிக்க வேண்டும். முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை யாரும் வழிமொழிய என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!
அதற்கு சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் நம்பிக்கை கூறும் தீர்மானத்தை யாரும் வழிமுறையை தேவையில்லை என்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், எம்ஜிஆர் ஜெயலலிதா என்று இருதரவர்களையும் குறிப்பிட்டு தான் மக்களை சந்தித்து 47 எம்எல்ஏக்களை வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக ஆட்சி உருவாகும் என நினைத்துதான் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர். 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றும். அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில், ஒரு தரப்பை முதலமைச்சர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல. குதிரை பேரும் நடப்பதாக சந்தேகிக்கின்றேன். 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். 66% பேர் தவெகவுக்கு வாக்களிக்கவே இல்லை. அதிமுகவில், ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது. தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்புக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜயபாஸ்கரன் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

