நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர்.
ஆட்சி அமைப்பதில் சிக்கல்?.. சட்ட நிபுணர்களுடன் விஜய் நடத்திய திடீர் சந்திப்பு..!
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தினர் எதையும் நினைத்து புலம்ப வேண்டாம் உறுதியாக இருங்கள். நல்ல முடிவு வரும் வரை காத்திருங்கள். உங்கள் முன்பு 10 கோடி ரூபாயை வைத்தாலும், பேரும் பேசினாலும் தலைவர் விஜயின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நேர்மையாக உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று பொதுச்செயலாளர் என் ஆனந்த் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

