பொதுவாக காய்கறிகளில் பிடிக்காத உணவு என்றாலே பாகற்காயை தான் சொல்வார்கள். ஆனால், கசப்பு சுவை கொண்ட இந்த பாகற்காய் நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது. ஆனாலும், அது நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும் சிலர் இதை சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். குறிப்பாக, குழந்தைகள் இதை கசப்புக்காய் என்று கூறி சாப்பிட மறுத்து விடுகிறார்கள்.

குழந்தர்களுக்கு பிடித்த ஆப்பிள் பர்பி.. 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஈஸி மெத்தட்..!
பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் நமக்கு சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அது மட்டும் இன்றி நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. ஆற்றல் கொண்ட பல சத்துக்கள் பாகற்காயில் உள்ளது. எடை குறைப்பு, கண் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் ரத்தத்தை சுத்தம் செய்வதிலும் உதவி புரிகிறது. அந்த வகையில், பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை தெரியாமல் அதில் சிப்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பாகற்காய்
- மூன்று மேஜை கரண்டி கடலை மாவு
- இரண்டுமே கரண்டி அரிசி மாவு
- ஒரு மேஜை கரண்டி சோள மாவு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- தனியா தூள்,
- கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
- மாங்காய் தூள் அல்லது எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி கசப்பை குறைப்பதற்காக
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
Step 1: முதலில் பாகற்காயை சுத்தமாக கழுவி அதை வட்ட வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளலாம். அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறும் தடவ வேண்டும். இதன் மூலம் அதில் இருக்கக்கூடிய கசப்புத்தன்மை நீங்கும்.
Step 2: பின்னர் அதை தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அதில் நாம் சேர்க்க வேண்டிய மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நாம் கழுவிய பாகற்காயை அதில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
Step 3: பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த நாம் கலந்து வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். அது நன்கு பெரிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதில் உள்ள எண்ணெயை வடிகட்டி அதை பகிரவும்.

