கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார் என்பவரின், தாயார் கஸ்தூரி. இவரை பார்த்துக் கொள்வதற்காக நேபாளத்தை சேர்ந்த சுர்ஜா 42 – வயது பெண்ணை வேலைக்கு சேர்த்து இருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய கணவர் ராஜூ மற்றும் உறவினர்கள் ராகேஷ் சவுத், திலீப், தாமூர் மும்தா ஆகியோருடன் சேர்ந்து மூதாட்டிய கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகை – பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த ராகேஷ் சவுத், திலீப், தாமூர் மும்தா ஆகிய மூன்று பேரை மட்டும் கைது செய்தனர். சுர்ஜா – ராஜூ நேபாளத்திற்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.
₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!
இதை அடுத்து அந்த நாட்டு போலீசார் உடன் மத்திய அரசு மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, இரண்டு மாதங்கள் ஆகியும் தலைமறைவாக உள்ள நேபாள தம்பதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது தம்பதியை தொடர்ந்து தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் அவர்களை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

