கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 74). இவர் கோவை மாவட்ட அரசு கருவூலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக வேலை செய்து வந்தார். திருப்பூரைச் சேர்ந்த நீலா பொன்னம்மாள் என்பவர் திருத்தி அமைக்கப்பட்ட பென்சன் மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்காக பழனிச்சாமியை அணுகினார். இந்த பணிகளை முடித்துக் கொடுக்க ரூபாய் 1,500 லஞ்சம் தருமாறு பழனிச்சாமி கேட்டு உள்ளார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் செய்யப்பட்டது. கடந்த 26.9.2013 அன்று ரூபாய் 1,500 லஞ்சம் வாங்கிய பழனிச்சாமியை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.
பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!
இந்த வழக்கு விசாரணை கோவையில் லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ஷர்மிளா பழனிசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

